மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 December, 2019 3:54 PM IST

ஊட்டியில் அமைந்து இருக்கும் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில், முதல் முறையாக மலைப்பகுதிகளுக்கு ஏற்ற மண் வள பாதுகாப்பு மற்றும் கால்நடைகளுக்கு ஏற்ற தீவன பயிர்களின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் பயிற்சி துவங்கியது.

மண் அரிப்பையும், தீவன தேவையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கம்பு, நேப்பியர் போன்ற வகை புற்கள் செயல் படுகிறது என பயிர் சாகுபடி பயிற்சியில் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்தார்.

தலைநகரில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் அனில்குமார் கலந்து கொண்டார். வளர்ந்து வரும் இயற்கை வேளாண்மை, குறைந்து வரும் கால்நடைகளின் எண்ணிக்கை இவை அனைத்திற்கும் தீர்வு கால்நடை வளர்ப்பது என தெரிவித்தார்.

நீலகிரியில் விவசாயிகள் கம்பு, நேப்பியர் போன்ற புதிய புல் வகைகளை பயன்படுத்தி மண் அரிப்பை தடுத்து  மேலும் பசுந்தீவன தேவைகளையும் பூர்த்தி செய்யும் படி அறிவுறுத்தினார். இவ்வாறு செய்வதினால் அடர் தீவனத்திற்கான செலவு கணிசமாக குறையும் எனவும், பால் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் கூறினார்.

English Summary: Experts suggest farmers; few native grasses can prevent soil erosion and fulfill livestock’s feed
Published on: 19 December 2019, 03:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now