Blogs

Thursday, 30 December 2021 06:01 PM , by: R. Balakrishnan

PF E-Nomination

இ-நாமினேஷன் (E-Nomination) செய்வதற்கான கடைசி தேதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ நீட்டித்துள்ளது. நாமினி பெயரைச் சேர்ப்பதற்கு டிசம்பர் 31 வரை அவகாசம் கொடுத்திருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டிருப்பது பயனாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இ-நாமினேஷன் (E-Nomination)

இதுதொடர்பாக இபிஎப்ஓ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது. இபிஎப்ஓ விதிகளின்படி இ-நாமினேஷனை தாக்கல் செய்வது கட்டாயமாகும். ஏனெனில் இது வருங்கால வைப்பு நிதி , ஓய்வூதியம் மற்றும் இன்சூரன்ஸ் (Insurance) பலன்களை எளிதாக உறுப்பினரின் மரணத்திற்கு பின்பு வாரிசுதாரர்கள் ஆன்லைன் மூலம் உரிமைகோரல்களை தாக்கல் செய்து பெற உதவுகிறது.

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கணக்கு வைத்திருப்பவர்களை இ-நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 31 க்குப் பிறகும் கணக்கு வைத்திருப்பவர்கள் இணையதளத்திலேயே ‘மின்-நாமினேஷன்’ வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும்.

இபிஎப்ஓ இணையளத்தில் பயனாளிகள் தங்கள் பிபிஎஃப் கணக்கில் வாரிசுதாரர் விவரங்களைப் புதுப்பிக்க முயற்சித்ததால் போர்டல் செயலிழந்ததாகத் தெரிவித்தனர்.

ஆன்லைனில் நாமினியை எவ்வாறு சேர்ப்பது: (How to add Nominee)

இபிஎப்ஓ இணையதளத்தில் சேவைகள், ஊழியர்களுக்கான ‘‘உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை’’ என்பதைக் கிளிக் செய்து நாமினியை சேர்க்கலாம்.

மேலும் படிக்க

ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி!

PF கணக்கில் ஆன்லைன் மூலம் நாமினி நியமனம் செய்வது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)