மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 January, 2021 9:46 PM IST
Credit : The Financial India

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், எல்ஐசி வாடிக்கையாளர்கள் தவறவிட்ட பாலிசிகளை (Policy) புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 'Special revival campaign' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், இதுவரை பாலிசிகளை தவறவிட்ட வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். மார்ச் 6ஆம் தேதி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.

கால அவகாசம்

தவறவிட்ட பாலிசிகள் (lapsed policy) என்றால், உரிய காலத்தில் பிரீமியத் தொகை செலுத்தாமல் விட்ட பாலிசிகள் ஆகும். எல்ஐசி வழங்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாலிசியை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், தவறவிட்ட பாலிசியை புதுப்பிக்காவிட்டால் இழப்பே மிஞ்சும். நாடு முழுவதிலும் இருக்கும் 1,500 எல்ஐசி அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம். பிரீமியம் (Premium) செலுத்தாத தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே பாலிசியை புதுப்பித்துக்கொள்ள முடியும் என எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆயுள் காப்பீட்டுக்கு முக்கியத்துவம்:

பிரிமீயம் செலுத்தாமல் தவறவிட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பாலிசிகளை இப்போது புதுப்பிக்க முடியாது. முடிந்தவரை, வாய்ப்பு கையில் இருக்கும்போதே பாலிசியை புதுப்பித்துவிட வேண்டும். இதேபோல கடந்த அக்டோபர் மாதமும் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி வாய்ப்பளித்தது. வாடிக்கையாளர்களின் ஆயுள் காப்பீட்டுக்கு (Life insurance) அதிக முக்கியத்துவம் அளிப்பதால், தவறவிட்ட பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி எல்ஐசி கேட்டுக்கொண்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வரவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான எதிர்ப்பார்ப்பு!

இரயில்வேவுடன் பிஸ்னஸ் செய்ய ஆசையா?அருமையான வாய்ப்பு!

English Summary: Fantastic offer announcement for LIC policyholders!
Published on: 18 January 2021, 09:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now