Blogs

Tuesday, 02 August 2022 11:35 AM , by: Elavarse Sivakumar

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்பி, கத்திரிக்காயை பச்சையாக கடித்து காட்டியது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்கட்சிகளின் அமளியுடன் , கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் நிலையில் நேற்று விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடந்தது.

ஒத்திவைப்பு

தொடக்கம் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய நிலையில், அமளி ஓயாததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

விவாதம்

இந்நிலையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி 'ககோலி கோஷ் தஸ்திதர் பேச துவங்கினார். அவர் பேசுகையில், கடந்த சில மாதங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.600லிருந்து இப்போது ரூ.1,100 ஆக அதிகரித்துவிட்டது. கடந்த ஓராண்டில் 8வது முறை உயர்த்தப்பட்டுள்ளது.

பச்சையாக சாப்பிட

இப்படியே விலை ஏறி கொண்டே போனால், காய்கறிகளை பச்சை சாப்பிட வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறதா என்றார். பின் திடீரென ஒரு கத்திரிக்காயை எடுத்து கடித்து காண்பித்தார். அவரது செயல் சக எம்.பிக்கள் மட்டுமல்லாது பிஜேபி எம்.பிக்களிடையேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நாட்டு மக்களின் நிலையைக் கருத்தில்கொள்ளாமல், 400 ரூபாயாக இருந்த சமையல் சிலிண்டர் விலையை 1,000 ரூபாய்க்கு மேல் உயர்த்திய  மத்திய அரசுக்கு இப்படித்தான் கண்டனங்களைத் தெரிக்க இயலும்.

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)