Blogs

Monday, 18 November 2019 11:46 AM

விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும்  21ம் தேதி கறவை மாடு வளர்பது குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் கறவை மாடு இனங்கள் வளர்ப்பு, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை,  கொட்டகை அமைத்தல் மற்றும் நோய்த் தடுப்பு போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட உள்ளன.  இப்பயிற்சியில் பங்கு கொள்ள விரும்பும் விவசாயிகள் அலுவலக வேலை நாட்களில் மையத்தை தொடர்பு கொண்டு நேரிலோ அல்லது 93853 07022 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தலைவர் ஜோதிலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Thanks: Agri dr

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)