மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 February, 2020 11:38 AM IST

பொதுவாக பருவநிலை மாறும் போது கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயானது ஒரு வித வைரஸின்  மூலமாக பரவுகிறது. பனிக்காலத்தில் இருந்து வெயில் காலம் துவங்கும் பிப்ரவரி மற்றும் கோடை காலத்தில் இருந்து மழை காலம் துவங்கும் ஜூன், ஜூலை போன்ற மாதங்களில் கழிச்சல் நோய் தோன்றுவது வழக்கம். இவ்வகை நோய்களை ஆரம்பத்திலே கண்டறிந்து அதற்கான மருந்தை கொடுக்கும் போது கோழியின் இறப்பை தவிர்க்க இயலும். அந்த வகையில் பெரம்பலூர் ஆட்சியர் கழிச்சல் நோய் தடுப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் பயனடையும் வகையில் பெரம்பலூர் கால்நடை பராமரிப்புத்துறை ஆண்டுதோறும் பிப்ரவரி 2வது வாரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இவ்வாண்டும்  வருகிற 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில்  8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர், மற்றும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கோழிகளை கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டார். 

English Summary: Free Vaccination Camp for chickens against coccidiosis: Announced by dist Collector
Published on: 07 February 2020, 11:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now