சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 February, 2020 11:11 AM IST
Organic Vegetables grow your garden

இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றிற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இதற்கான சந்தை வாய்ப்பு சாதகமாக இருப்பதால் பலருக்கும் பயன்படும் விதத்தில் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், வருகின்ற 20ம் தேதி இயற்கை காய்கறிகள் சாகுபடி பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பயிற்சியின் சிறப்பம்சம்

  • இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்வது மற்றும்  அதன் முக்கியத்துவம் 
  • உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் செயல்படும் விதம்
  • இயற்கை வழியில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி விரட்டி கரைசல்கள்தயாரித்தல், 
  • இயற்கை முறையில் தாவர வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்துதல் 
  • அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள்

போன்றவை குறித்து விரிவான செயல் விளக்கத்துடன் பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளன.

Grow your own garden

வேளாண் அறிவியல் மையத் தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பில், இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி குறித்த, ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் செய்ய விரும்புவோர் என அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை  நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்புக் கொண்டு  தங்களது பெயரை 19ம் தேதி காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி 20ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Free workshop for organic growers: KVK organized one day training for public
Published on: 17 February 2020, 11:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now