Blogs

Wednesday, 13 November 2019 03:36 PM

தமிழகத்தில் கத்தரிக்காய் சாகுபடியில் திண்டுக்கல் மாவட்டம்  முன்னணியில் இருந்து வருகிறது. எனினும்  நூற்புழுக்கள், வேர் அழுகல் போன்ற காரணங்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. எனவே காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம் உருவாக்கிய புதிய ரக ஒட்டுக்கத்தரி நடவு செய்து 5, 6 மாதங்களில் நல்ல பலன் தரும்.  கத்தரியில் தோன்றும் நுாற்புழுக்கள் மற்றும் வேர் அழுகல் போன்றவற்றை  தடுத்து அதிக மகசூல் தருகிறது. நடவு செய்து ஆறாவது மாதம் முதல் செடியை கவாத்து செய்து உரம் மற்றும் நீர் நிர்வாக முறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மேலும் மறுதாம்பு பயிராக பராமரித்து தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதனால் நிலம் தயாரிக்கும் செலவு குறைவதோடு, அதிக மகசூல் மற்றும் லாபம் கிடைக்கும். இந்த வகை ஒட்டுக்கத்தரி வேளாண் அறிவியல் மையத்தில் பயிரிடப்பட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நன்றி: அக்ரி டாக்டர்

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)