Blogs

Tuesday, 25 October 2022 09:08 AM , by: R. Balakrishnan

Pension scheme

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருள் மட்டுமல்ல; அதுவொரு சிறந்த முதலீட்டுக் கருவியாகவும் மக்களால் கருதப்படுகிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்கப் பலர் தங்களிடம் உள்ள தங்கத்தைத் தான் முதலில் அடகு வைக்கவோ அல்லது விற்கவோ முனைவர்.

தங்க சேமிப்புத் திட்டம் (Gold Savings Scheme)

தங்கம் கெளரவமான ஒன்றாகும் இந்தியாவில் கருதப்பட்டு வருகிறது. அதே தங்கத்தை நாம் அன்றாட வாழ்வில் நகையாக வாங்காமல் பாண்டுகள், பத்திரங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தங்கச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் தங்கத்தைப் போலவே இரு மடங்கு உயர்வு தரும். தங்கத்தை வாங்கினால் அவற்றை வீட்டில் வைக்கவும் பயம் ஏற்படும். அதைப் பொருளாக வாங்கும்போது அதற்குண்டான செய்கூலி மற்றும் சேதாரங்களுக்கு அதிக செலவிடக்கூடும்.

அதே மியூச்சுவல் ஃபண்ட் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்தால் இவ்வகை பிரச்சனைகளும் எழாது உங்கள் தங்கமும் டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக இருக்கும். இன்றுள்ள காலத்தில் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு என்றால் அடுத்த 15 வருடங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள்தான் அதிக வருமானத்தை பெற்று தங்களின் ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக இருப்பார்கள். அதனால் மியூச்சுவல் ஃபண்டில் சிறந்த கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளில் (Gold ETF Fund) உங்கள் நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்களின் வருமானத்திற்கேற்ற சிறந்த ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள், உங்கள் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழியுங்கள்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தீபாவளி பரிசு அளித்த மாநில அரசு!

SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: இதோ சூப்பரான தீபாவளி பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)