Blogs

Thursday, 30 April 2020 06:07 PM , by: Anitha Jegadeesan

புதிதாக  நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.

கோவை மாவட்டத்தில், ரூ.450 கோடி செலவில்  7000 ஏக்கர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசன திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், குறைந்த நீர்பாசனத்தில் அதிக பயிர்களை விளைவிக்க இயலும். மேலும் நீரில் கரையும் ரசாயன உரங்களை நீரில் கலந்து இடுவதால் 70 சதவீதம் வரை நீர் சேமிக்க முடியும்.  அத்துடன் தண்ணீர் பாய்ச்சுவதற்கான கூலியாட்கள் தேவையில்லை, குறைந்த நீர்பாசனத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெற முடியும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பின்வரும் ஆவணங்களுடன் அந்தந்த, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும்.

  • நிலவரைபடம்
  • கூட்டு வரைபடம்
  • ஆதார் அட்டை
  • சிட்டா
  • ரேஷன் கார்டு
  • நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று
  • சிறு, குறு விவசாயி சான்று

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)