மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 April, 2020 6:22 PM IST

புதிதாக  நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்கும் விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.

கோவை மாவட்டத்தில், ரூ.450 கோடி செலவில்  7000 ஏக்கர் பரப்பளவிற்கு நுண்ணீர் பாசன திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், குறைந்த நீர்பாசனத்தில் அதிக பயிர்களை விளைவிக்க இயலும். மேலும் நீரில் கரையும் ரசாயன உரங்களை நீரில் கலந்து இடுவதால் 70 சதவீதம் வரை நீர் சேமிக்க முடியும்.  அத்துடன் தண்ணீர் பாய்ச்சுவதற்கான கூலியாட்கள் தேவையில்லை, குறைந்த நீர்பாசனத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெற முடியும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பின்வரும் ஆவணங்களுடன் அந்தந்த, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும்.

  • நிலவரைபடம்
  • கூட்டு வரைபடம்
  • ஆதார் அட்டை
  • சிட்டா
  • ரேஷன் கார்டு
  • நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று
  • சிறு, குறு விவசாயி சான்று
English Summary: Good News for Farmers: Get 100% Subsidy for the installation of Micro irrigation
Published on: 30 April 2020, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now