மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 November, 2019 5:41 PM IST

கோழிப்பண்ணைத் தொழிலை லாபகரமாக நடத்த பண்ணையாளர்களுக்கு அரிய வாய்ப்பு காத்திருப்பதாக நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் குளிர் காலம் தொடங்கியதை அடுத்து அங்கு முட்டைகளின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் டிசம்பர் மாதங்களில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால்  ஒரு முட்டை ரூ.4.50 வரை விற்பனையாவதற்கு வாய்ப்புண்டு என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் முட்டையின்  கையிருப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  மேலும் ஹைதராபாத், ஹோஸ்பேட்  பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் , கடந்த 6 மாதமாக முட்டை உற்பத்தி குறைந்து  வருகிறது.

இது போன்ற காரணங்களினால் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.10-க்கும் மேல் இருக்கும் என    நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. எனவே  கோழி பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்கால தேவையை கவனத்தில் கொண்டு லாபம் பெற அறிவுறுத்தப் படுகிறார்கள்.

English Summary: Good News for Namakkal egg producers: Demand for Egg will be increase
Published on: 27 November 2019, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now