Blogs

Thursday, 12 August 2021 08:38 PM , by: R. Balakrishnan

National Pension Scheme

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் எண்ணற்ற பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நற்செய்தியாக தற்போது உத்திரவாத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) உள்ள நாட்டின் லட்சக்கணக்கானவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஓய்வூதிய கட்டுப்பாட்டு அமைப்பான PFRDA தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருவாய் திட்டத்தை (Minimum Assured Return Scheme - MARS) கொண்டு வர உள்ளது.

அசத்தல் திட்டம்

ஆலோசகரை நியமிக்க PFRDA உத்தரவு வெளியிட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இந்த திட்டத்தை வடிவமைக்க ஆலோசகர்களுக்கு நியமிக்க கோரிக்கையை (RFP) வெளியிட்டுள்ளது.

EPFO புதிய வசதி: அவசரத் தேவைத்கு PF கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் முன்பணம்

இது தொடர்பாக ஓய்வூதிய நிதி மற்றும் செயல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதன் அடிப்படையில், திட்டம் தயாரிக்கப்படும். PFRDA திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வருமானத் திட்டம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) ஆகியவற்றில் அம்சங்களை இணைப்பதில் PFRDA நிறைய பணிகளை செய்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள். PFRDA கொண்டுவர திட்டமிட்டுள்ள திட்டம் அதன் முதல் தனித்துவமான திட்டமாக இருக்கும். ஏனெனில் PFRDA இதுவரை எந்த உத்தரவாத திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

இந்த ஓய்வூதிய உத்தரவாதம் திட்டத்தின் சந்தையுடன் இணைக்கப்படும் என்று PFRDA கூறுகிறது. முதலீட்டு மீதான வருவாயின் உத்தரவாத வருமானத்தின் பங்கை நிதி மேலாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் படிக்க

முக்கிய பலன்களை அளிக்கும் தேசிய பென்ஷன் திட்டம்!

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவு: 15 வங்கிகள் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)