மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 April, 2021 10:23 AM IST
Business Standard

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் நிலவும் ஏற்ற இறக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு என பல்வேறு காரணங்களால், கடந்த சில நாட்களாக பெட்ரொல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், 2 கோடி ரூபாய் பரிசு வெல்ல புதியத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் (IOC)அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டரில் அறிவிப்பு (Notice on Twitter)

இந்தியன் ஆயில் நிறுவனம், இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, உங்கள் வாகனத்துக்கு 25 லிட்டர் டீசல் போட வேண்டும். இந்த 25 லிட்டர் டீசலும் ஒரே பில்லில் (Bill) இருக்க வேண்டும். இதன்பின் ஒரு SMS அனுப்பினால் 2 கோடி ரூபாய் வெல்வதற்கான வாய்ப்பு உங்களுக்குதான்.

ரூ.2 கோடி பரிசு (Rs. 2 crore prize)

ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு 15 நாட்களுக்கும், ஒவ்வொரு மாதமும் பரிசு வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு Diesel Bharo Inaam Jeeto’ என பெயரிடப்பட்டுள்ளது.

செய்ய வேண்டியது என்ன? (What to do?)

உங்கள் வாகனத்துக்கு 25 லிட்டர் டீசல் போட்டுவிட்டு, மொபைலில் இருந்து DEALER CODE (SPACE) BILL NUMBER (SPACE) QUANTITY ஆகியவற்றை டைப் செய்து 7799033333 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.

காலக்கெடு (Last Date)

இத்திட்டம் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

தகுதி (Qualification)

18 வயதை கடந்த இந்தியக் குடிமக்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
ஒரு நாளைக்கு 2 SMS மட்டுமே அனுப்ப முடியும். வெற்றிபெறுவோருக்கு 2 கோடி ரூபாய் வரை பரிசு கிடைக்கும்.

மேலும் படிக்க...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- நாளை முதல் அமல்!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

English Summary: Great chance to win 2 crore rupees-Don`t miss it!
Published on: 19 April 2021, 10:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now