நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 August, 2022 8:52 AM IST

வறுமையில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வெகுமதி கொடுத்து கவுரவிக்கலாம். அந்த வகையில், 2 லட்சம் ரூபாயை நேர்மையாக ஒப்படைத்தப் பெண்ணுக்கு, காவல்துறை ஆணையர் 1 கிராம் தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.

ரூ.100 சம்பளம்

திருச்சி, தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி, 57. இவர் நேற்று வேலைக்கு சென்ற போது, ஹோட்டலுக்கு அருகில் காகிதப்பையில் அதிகமான பணம் இருந்துள்ளது.

காசுக்கு ஆசைப்படாத பெண்

அதை எடுத்து பார்த்த ராஜேஸ்வரி, ஹோட்டல் உரிமையாளர் பிரபாகர் உதவியுடன் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். தினமும் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் ராஜேஸ்வரி, காகித பையில் இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்படாமல், நேர்மையுடன் அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருப்பதைத் தெரிந்துகொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தார்.ராஜேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், 1 கிராம் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தார்.

நேர்மையாக இருக்கவேண்டும் என்பது சிறுவயது முதலே நமக்கு போதிக்கப்பட்ட ஒன்று. நாம் படித்தக் கல்வி நமக்கு போதித்தது அதுதான்.
ஆனால், வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் அதனைக் கடைப்பிடிப்பவர்கள் சொற்பமே. அந்த வகையில், மற்றவர்களுக்கு உதாரணமாக மாறியுள்ள இந்த பெண்ணின் நேர்மைக்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Handed over Rs. 2 Lakhs- got a gold coin as a gift!
Published on: 13 August 2022, 08:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now