மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 March, 2020 1:54 PM IST

கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிவப்பு கொய்யா சாகுபடி செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன்  ஈடுபட்டு வருகின்றனர்கள். இடுபொருள் செலவு, நீர் தேவை, பராமரிப்புபணி, கூலி ஆட்கள் தேவை என அனைத்தும் குறைவாகவே இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சிவப்பு கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

மலைக்கோட்டாலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,  கொய்யா சாகுபடிக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதில்லை. ஒருமுறை பயிரிட்டால், அடுத்த 15 ஆண்டுகள் வரை காய்ப்பதால் கணிசமான லாபம் கிடைக்கிறது. வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானதாது. குறிப்பாக உரம் தெளிக்கும் பணி இல்லை. காய்கள் பாதிப்படையாமல் இருக்க இயற்கை முறையில் மாதத்திற்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்பதாக தெரிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு எரு தெளித்தால் போதுமானது. 4 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 3 டன் வரை கிடைக்கும், என தெரிவித்தார்கள்.

பல்வேறு நோய்களுக்கு இப்பழம் தீர்வாக இருப்பதால் பொதுமக்களும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக சர்க்கரைநோய், கேன்சர், அல்சர், மலட்டு தன்மை போன்றவற்றை போக்குகிறது. மேலும் மதிப்பூட்டப்பட்ட பொருள்களான ஜூஸ், சாஸ் உள்ளிட்ட தயாரிக்க பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர, உள்ளூர் சந்தைகளிலும் கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.

English Summary: How to start profitable Red Guava caultivation? and Where do you get taiwan pink guava seeds?
Published on: 13 March 2020, 01:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now