மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 January, 2020 2:37 PM IST

காய் வகைகளில் அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணும் மற்றும் அனைத்து நோயாளிகளும் உண்ணக்கூடிய காய், பீர்க்கங்காய் ஆகும். உள்ளூர் சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் இக்காய் தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாவதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் விரும்பி பயிர் செய்கின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் பல்வேறு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப் பட்டு வருகின்றன. அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை பயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால் வேளாண்மை  அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் குறுகிய கால பயிர்களை   விரும்பி பயிர் செய்கின்றனர். கொடி வகைகளான பாகல், புடலை, அவரை, பீர்க்கை ஆகியன குறைந்த நாட்களில் மகசூல் தருகிறது.

நடவு செய்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பலன் தர துவங்கும். நான்கு நாட்கள் இடைவெளியில் காய்கள் பறிக்கலாம். இவ்வாறாக தொடர்ந்து 80 நாட்கள் வரை மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும். மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். இதில் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும். சந்தையில் கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைப்பதால், ஏக்கருக்கு ரூ.2.5 லட்சதிற்கு மேல் வருவாய் கிடைப்பதாக தெரிவித்தனர். நடவு செய்த 40 நாட்களில், ஏக்கருக்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

English Summary: Huge Demand for Ridge Gourd: Farmers are exporting Malaysia and Singapore
Published on: 09 January 2020, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now