நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 October, 2021 6:27 AM IST

செல்போன் மோகம் அதிலும் ஸ்மார்ட்போன் வைத்துக்கொண்டு, நாம் விரும்பும் விஷயத்தை, விரும்பும் நேரத்தில் பார்த்து மகிழ்வது என்பது தற்போது பலருக்கும் அன்றாட நிகழ்வாக மாறி விட்டது.

இளைஞர்களின் இலக்கு (Target of youth)

அதனால் ஸ்மார்ட்போன் வாங்குவது என்பதை, இளைஞர்கள் பலரும் இலக்காகக் கொண்டுள்ளனர். அதற்காக எதையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள் என்பது கொடுமையின் உச்சக்கட்டம் தான்.
அப்படியொரு சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.

திருமண வாழ்க்கை (marriage life)

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அதே மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர், கணவன் - மனைவி இருவரும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

ஸ்மார்ட்போன் மோகம் (Smartphone craze)

அப்போது, அந்த 17 வயது சிறுவன், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவரிடம் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளான். பின்னர், அந்தப் பணத்தின் ஒருபகுதியைக் கொண்டு, விரும்பியதை வாங்கிச் சாப்பிட்ட அந்தச் சிறுவன், தனக்கென்று ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கியிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த சிறுவன், தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக நாடகமாடினான். இதனை நம்பாத பெண்ணின் குடும்பத்தார், இது தொடர்பாக ஒடிசா போலீசாரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில் அம்பலம் (Exposed at trial)

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தன் மனைவியை விற்று ஸ்மார்ட்போன் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளான் சிறுவன்.
நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணை ஒடிசா காவல் துறையினர் மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், தற்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

மேலும் படிக்க...

நவ. 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது- இவர்களுக்கு மட்டும்!

சீனாவில் மீண்டும் கொரோனா- அச்சத்தில் உலக நாடுகள்!

English Summary: Husband who sold his wife and bought a smartphone!
Published on: 23 October 2021, 11:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now