மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 August, 2021 8:27 PM IST
Impact of climate change on Madurai

தமிழகத்தில் காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கும் மாவட்டமாக மதுரை இருப்பது இந்திய வானிலை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில், மதுரை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை (SouthWest Monsoon) காலகட்டத்தில் மதுரை, தர்மபுரி மாவட்டங்களில் பெய்கிற மழையின் அளவு குறைந்து வருகிறது. இதில் ஆண்டு சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே. தவிர வறண்ட நாட்களின் எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

இதை கருத்திற்கொண்டு நிகழவிருக்கும் ஆபத்தை தடுக்க சில முன்னெடுப்புகளை எடுப்பது அவசியம் என முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33 சதவீதமாக அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள காடுகளை வேறு எந்த பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது. அக்காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து முழுக் கொள்ளளவிற்கு துார்வார வேண்டும்.

வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வர வேண்டும். மதுரை, தமிழகத்தின் கலாச்சார தலைநகரம். அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை (Air Pollution) குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

கியாஸ் மானியம் வரவில்லையா: My LPG-யில் புகார் அளிக்கலாம்

குழந்தைகளைத் தாக்கும் புளூ வைரஸ்: விழிப்புடன் இருங்கள்!

English Summary: Impact of climate change on Madurai: shocking information in the study
Published on: 31 August 2021, 08:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now