Blogs

Thursday, 19 March 2020 03:04 PM , by: Anitha Jegadeesan

மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தில் விளையும் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு விளையும் மஞ்சள், உலகப்புகழ் பெற்றது என்பதால் இங்கிருந்து நாடு முழுவதும், அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிது. ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

வார நாட்களில் இங்கு மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களுக்கு விடுமுறை என்பதால், மஞ்சள் வணிக வளாகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வர்த்தக நிலையங்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து, வரும் 23ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை மஞ்சள் வர்த்தகத்திற்கு விடுமுறை என அறிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் 8ம் தேதி (புதன்கிழமை) முதல் மஞ்சள் வர்த்தகம் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)