Blogs

Saturday, 05 February 2022 04:11 PM , by: R. Balakrishnan

Valluvar Theru in United States

அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் (Thiruvalluvar) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு.

வள்ளுவர் தெரு (Valluvar Theru)

தற்போது திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “அமெரிக்க மண்ணில் முதல்முறையாக வெர்ஜினியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெரு” உருவாகியுள்ளதாக வள்ளுவன் தமிழ் மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெர்ஜினியா மாநில அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் ட்விட்டரில், “தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். புகழ்பெற்ற கவிஞர் வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த தெரு ஆங்கிலத்தில் 'Valluvar Way' எனவும், தமிழில் வள்ளுவர் தெரு எனவும் அழைக்கப்படும்.

தமிழுக்கு முக்கியத்துவம் (Importance For Tamil)

வெளி நாடான அமெரிக்காவில் தமிழுக்கும், தமிழறிஞருக்கும் முக்கியத்துவம் கிடைத்திருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. தமிழின் அருமை உலகெங்கிலும் பரவி இருப்பது ஆனந்தத்தை அளிக்கிறது.

மேலும் படிக்க

வேலைவாய்ப்புகளை வழங்கும் முக்கியத் துறைகள் எவை?

மிகப்பெரிய பவர் பேங்க்: வியப்பை ஏற்படுத்திய வெல்டர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)