மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 April, 2020 12:45 PM IST

பலாப்பழ சீசன் துவங்க உள்ளதால், பழங்கள் தேவைப்படுவோர், கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் வாங்கி செல்லலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கல்லாற்று மலைகளுக்கு நடுவில் 25 ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இங்கு நிலவும் ரம்யமான சூழல் பல்வேறு பழ மரங்களும், வாசனை திரவிய மரங்கள் மற்றும் செடிகள் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது.  இங்கு மங்குஸ்தான், பலா, லிச்சி, ரம்பூட்டான், துரியன் போன்ற அரிய வகை பழங்கள் விளைவிக்கப் படுகின்றன. இங்கு 70-ற்கு மேற்பட்ட  பலா மரங்கள் உள்ளன.  ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் வாரத்தில் பலாப்பழ சீசன் துவங்கி ஜூன் மாதம் இறுதி வரை இருக்கும். கரோனா தடுப்பு நடவடிக்கையால் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இங்கு அறுவடை செய்யப்படும் பழங்கள் கிலோ, ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வரும் 15ம் தேதி முதல்  பலாப்பழம் அறுவடை செய்யும் பணி துவங்க உள்ளதால் தேவைப்படுபவர்கள், நேரடியாக பண்ணைக்கு  வந்து வாங்கி செல்லலாம் என, தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary: Important Announcement From Horticulture Department - Mouth watering Jackfruit Sales will Start After The Lockdown Period
Published on: 03 April 2020, 12:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now