Blogs

Sunday, 17 April 2022 02:44 PM , by: R. Balakrishnan

Pensionors

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு மூத்த குடிமக்களுக்கு சலுகை கிடைத்துள்ளது. பென்சன் வாங்கும் அனைத்து மூத்த குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் சமர்ப்பிக்காவிட்டால் பென்சன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசமும் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அடிக்கடி நீட்டிக்கப்பட்டது.

ஆயுள் சான்றிதழ் (Life Certificate)

கடைசியாக வெளியாகிய அறிவிப்பின் படி, அனைத்து ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் நிறையப் பேர் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இதனால் மூத்த குடிமக்களுக்கான பென்சன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

அதாவது, பென்சன் திட்டத்தில் பயன்பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இனி ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் எந்த நெருக்கடியும் இருக்காது. பென்சனர்கள் சமர்ப்பிக்கும் இந்த ஆயுள் சான்றிதழ் ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். உதாரணமாக, 2022 ஏப்ரல் 16ஆம் தேதி நீங்கள் இந்த சான்றிதழைச் சமர்ப்பித்தால் 2023 ஏப்ரல் 16ஆம் தேதி வரை மட்டுமே இது செல்லும். அதன் பிறகு மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் EPS 95 பென்சன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கான பென்சன் வருவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டே பிஎஃப் அமைப்பு இச்சலுகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

பான் - ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா? இதைச் செய்து உடனே இணைக்கலாம்!

பென்சன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி: அரசின் சூப்பர் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)