Blogs

Wednesday, 30 August 2023 05:44 PM , by: Muthukrishnan Murugan

Important information related to PAN card

கடந்த ஜூன் 30, 2023-க்குள் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றால், அது செயலற்றதாகிவிடும் என அறிவிக்கப்பட்டது. அதாவது உங்களது பான் கார்டை உங்களால் பயன்படுத்த முடியாது, அப்படி பயன்படுத்த விரும்பினாலும் அபராதம் செலுத்த வேண்டும் என தற்போது நடைமுறையில் உள்ளது.

வருமான வரி விதிகளின்படி, செயல்படாத பான் (in active) என்பது பான் கார்டு இல்லாததற்குச் சமம். வங்கி கணக்குகளை உருவாக்கும்போது, முதலீடுகளைச் செய்யும்போது அல்லது பிற வங்கி செயல்பாடுகளைச் செய்யும்போது பான் கார்டு தேவைப்படும். அதுப்போன்ற சூழ்நிலைகளில் பான் கார்டு இல்லையென்றால் மிகவும் சிரமம்.

உங்களிடம் ஏற்கனவே உள்ள பான் கார்டு செயலிழந்துவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கிற்கு சம்பளம் வருமா என்று உங்களில் பலர் யோசிக்கலாம். உங்கள் பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தால், உங்கள் சம்பளம் உங்கள் கணக்கிற்கு அனுப்பப்படாது என்று அர்த்தமில்லை. சம்பளம் முதலாளியின் சார்பாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதனுடன் டிடிஎஸ் கட்டணமும் கழிக்கப்படும். இருப்பினும், வங்கியில் இருந்து கணக்கிற்கு பணத்தை மாற்றுவதில் தாமதம் ஏற்படலாம்.

பான் கார்டை செயலிழக்கச் செய்வது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதிக்குமா?

உங்கள் பான் கார்டு செயல்பாட்டில் இல்லை என்றால், நீங்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப முடியாது. கூடுதலாக, சர்வதேச ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது மற்றும் விற்பனை புள்ளி பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது. மேலும், கிரெடிட் கார்டுகளை வெளிநாடுகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது.

மறுபுறம், நீங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பான் கார்டு அவசியம். KYC-க்கு PAN அவசியம். இருப்பினும், ஆதார் அட்டை மற்றும் பிற முறைகளைப் வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளும்.

செயலிழந்த பான் கார்டை மீண்டும் செயல்படுத்த முடியுமா?

உங்கள் பான் செயலிழந்தால், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு விண்ணப்பித்து ரூ. 1,000 அபராதம் செலுத்தி அதை மீண்டும் செயல்படுத்தலாம். இருப்பினும், பான்-ஆதார் இணைப்பு கோரப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் முடியும் வரை பான் செயலற்ற நிலையிலே இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

பான் எண்ணை மீண்டும் செயல்படுத்த நீங்கள் அருகிலுள்ள ஜன் சுவிதா கேந்திராவை அடைய வேண்டும், அங்கு நீங்கள் இந்த பணியை மேற்கொள்ளலாம். இச்சேவைக்கு ஜன் சேவா கேந்திராவிற்கு ரூ.1,000 மற்றும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகளின் சேவை தடைபடாது தொடர வேண்டும்பட்சத்தில் பான் கார்டினை தற்போதாவது மீட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் காண்க:

தேசிய விதைகள் கழகத்தில் 89 காலிப்பணியிடம்- AGRI பயின்றவர்களுக்கும் வாய்ப்பு

தொடரும் கனமழை- இன்று 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)