மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 January, 2020 1:50 PM IST

வெங்காயம் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மற்றும் உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50 வரை விற்பனையாகிறது. இதன் விலை பொங்கலுக்கு பிறகு மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

கடந்த ஓரிரு மாதங்களாக வெங்காயத்தின் விலை உட்சத்தில் இருந்து வந்தது. காலம் தவறிய பருவமழையே இதற்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது. வெங்காயத்தினை பெருமளவில் சாகுபடி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இருந்து வருகின்றன. அங்கு பெய்த  கனமழையால், வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக வரத்து குறைந்து, நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.200க்கு விற்பனையானது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக உச்சத்தில் இருந்த வெங்காயம் விலை, தற்போது, படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாது உள்நாட்டில் இருந்தும்  வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரத்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வந்திருப்பதால் 1 கிலோ வெங்காயம், ரூ.50க்கு விற்பனையாகிறது. தை பிறந்த பிறகு ரூ.20 முதல் 25 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

English Summary: Imported onions overcome our scarcity: Gradually prices will come down
Published on: 08 January 2020, 01:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now