மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 November, 2021 3:44 PM IST
LIC Super Scheme

நீங்கள் பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு எல்ஐசி முதலீடு (LIC Investment) ஒரு நல்ல இடமாக இருக்கும். எல்ஐசி பாலிசிதாரர் ஒரு வேளை இறந்துவிட்டால், அவர் மறைவுக்குப் பிறகும் அவரது குழந்தைக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு பாலிசியைப் பற்றி இந்த பதிவில் காணலாம். எல்ஐசியின் ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவருடைய குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் ஒருவர் இயற்கையான காரணங்களாலோ அல்லது விபத்து காரணமாகவோ இறந்தால், அவரது குடும்பத்திற்கு காப்பீடு (Insurance) கிடைக்கும். மேலும், இறந்தவர்களின் குறைந்தது 2 குழந்தைகளுக்கு மாதம் 100 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இந்தக் பாலிசியின் மூலம், குழந்தைகள் எந்த இடைவெளியும் இல்லாமல் தங்கள் கல்வியை தொடர்கிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ், செங்கல் சூளை தொழிலாளர்கள், மீனவர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், கைவினை கைவினைஞர்கள், காதி நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், பெண் தையல்காரர்கள், அப்பளம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள், வனப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், நகர்ப்புறம் ஏழைகள், காகித உற்பத்தியாளர்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர் முதலீடு செய்யலாம்.

பிரீமியம்

இந்தத் திட்டத்தில் (LIC Policy) முதலீடு செய்ய உங்கள் வயது 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது நியமனத்தின் தகவலை நிரப்புவது மிகவும் முக்கியம். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ .200 பிரீமியமாக செலுத்த வேண்டும்.
இறப்பு மற்றும் விபத்து நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

நன்மைகள்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் மக்கள் ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். ஆனால் குடும்பத் தலைவர் இயற்கையான காரணங்களால் இறந்தாலோ அல்லது விபத்து காரணமாக நிரந்தர அல்லது சிறிய அளவிலான இயலாமை வந்தாலோ அவர்களுக்கும் இதில் கவரேஜ் கிடைக்கிறது.

பாதுகாப்பு

இயற்கையான காரணங்களால் குடும்பத் தலைவர் இறக்கும் பட்சத்தில், அந்த குடும்பத்திற்கு 30,000 ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இது தவிர, விபத்தால் மரணம் ஏற்பட்டால், ரூ .75000, உடல் ஊனமுற்றால் ரூ .75000, மனநலம் பாதிக்கப்பட்டால் ரூ. 37500 கிடைக்கும்.

மேலும் படிக்க

SBI வங்கியின் அசத்தல் திட்டம்: இரட்டை நன்மையுடன் அறிமுகம்!
ஓய்வூதியர்களுக்கு சூப்பர் நியூஸ்: SBI வழங்கிய புதிய வசதி!

English Summary: Incentive up to 12th class on this policy of LIC!
Published on: 03 November 2021, 09:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now