Blogs

Monday, 13 September 2021 04:10 PM , by: Aruljothe Alagar

IRCTC Indian Railways: Emphasis on the Elderly and Women!

ஐஆர்சிடிசி இந்திய ரயில்வே முன்பதிவு டிக்கெட் உறுதி

பண்டிகை காலம் வருகிறது. பல பண்டிகைகள்  இன்னும் ஒரு மாதத்தில் வரவிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு விடுமுறைக்காக செல்வார்கள். இதற்கிடையில், ரயில்வேயில் டிக்கெட்டுகளுக்கான ஆரவாரம் அதிகரிக்கும் மற்றும் நீண்ட காத்திருப்பு பட்டியலை இடம்பெற வேண்டியிருக்கும். இந்த நிலையில் எப்படி உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டைப் பெறலாம் ? இந்த கேள்வி அனைவருக்கும் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், உறுதியான டிக்கெட்டைப்  எவ்வாறு பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு வசதிகள் பற்றி ஐஆர்சிடிசி சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வசதி ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தாலும், ரயில்வே மீண்டும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. லோயர் பெர்த்தை முன்பதிவு செய்வது குறித்து, ஐஆர்சிடிசி வழங்கும் இந்த வசதியை மக்கள் பல முறை பயன்படுத்த முடியவில்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

பல பயணிகள் இந்திய இரயில்வேயில் பயணம் செய்கிறார்கள், பயணம் செய்வதற்கு அவர்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி மூலம் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்தை முன்பதிவு செய்வதற்கான விருப்பம் இருந்தும் அவர்களால் முன்பதிவு செய்யமுடிவதில்லை. ஆனால் தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கான  லோவர் பெர்த் டிக்கெட்டுகளை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

எப்படி முன்பதிவு செய்வது?

முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் IRCTC க்கு செல்ல வேண்டும். இங்கே நீங்கள் முதலில் பயண தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு இலக்கின் பெயரை உள்ளிடவும். இதற்குப் பிறகு, அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்களின் பட்டியல் உங்கள் முன் திறக்கும். இதற்குப் பிறகு, உங்களுக்கு விருப்பமான ரயிலைத் தேர்ந்தெடுத்து, கீழே உள்ள மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த்தின் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, மூத்த குடிமக்களுக்கான ரயில்களில் இருக்கும் இருக்கைகளின் பட்டியல் தோன்றும். இங்கே நீங்கள் சம்பந்தப்பட்ட நபர் அல்லது பெண்ணின் பெயரை நிரப்பி சமர்ப்பிக்கவும். இதற்குப் பிறகு பணம் செலுத்திய பிறகு டிக்கெட் உறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க...

தெற்கு ரயில்வேயின் இலவச Wi-Fi ஏற்பாடு! ரயில்வேத்துறை அமைச்சகம் முயற்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)