மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 December, 2020 10:00 AM IST
Credit : Hindustan Times

அனைத்து ஊழியர்களுக்கும் பிஎஃப் (PF) வசதியை வழங்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இதற்காக, ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகையை பிடித்தம் செய்கிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது மட்டுமல்லாது PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன.

EPFO-இன் நன்மைகள்:

1. இலவச காப்பீட்டு வசதி

உங்கள் பிஎஃப் கணக்கு தொடங்கியவுடன், இயல்பாகவே இலவச காப்பீட்டைப் (Insurance) பெறலாம். ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (ஈ.டி.எல்.ஐ) கீழ் ரூ .6 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால், EPFO இன் செயலில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு, ₹ 6 லட்சம் வரை மொத்த தொகை கிடைக்கும். இந்த நன்மையை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

2. வரி சலுகைகள்:

வருமான வரியில் பணத்தை மிச்சப்படுத்த EPF மிகவும் எளிய மற்றும் சிறந்த வழி. EPF கணக்கு வைத்திருப்பவர்கள், வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளை சேமிக்க முடியும். ஆனால் புதிய வரிவிதிப்பு முறையில் இந்த நன்மை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உங்கள் வரியைக் கணக்கிடுவதற்கு பழைய வரி (Tax) முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நன்மையை நீங்கள் பெறலாம்.

3. ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய நன்மை

EPFO ACT -இன் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் கலுகைகளில் (Allowance) 12 சதவீதம் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதேபோல், நிறுவனங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் சலுகைகள் (Allowance) ஆகியவற்றில் 12% பங்களிப்பு செய்கின்றன. இதில் 3,67% ஊழியர்களின் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.

4. செயலற்ற கணக்கில் வட்டி

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், நிலுவையில் இல்லாத (inactive) ஊழியர்களின் செயலற்ற பி.எஃப் கணக்குகளுக்கு வட்டி அளிக்கிறது. 2016 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற நிலையில் இருக்கும், பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூட தொடர்ந்து வட்டி பெறுவார்கள். 2016-க்கு முன்பு மூன்று ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள கணக்குகளுக்கு வட்டி பெறுவதற்கான ஏற்பாடு இல்லை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண் பயன்பாட்டிற்கு எந்திரங்களை இனி விவசாயிகள் வாடகைக்கு எடுக்கலாம்! வேளாண்மை பொறியியல் துறை அறிவிப்பு

விரைவில் வரப்போகுது பிஎஃப் வட்டி பணம்! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

இதை மட்டும் செய்தால் Whatsapp இல் பணம் சம்பாதிக்க வாய்ப்பு

English Summary: Is there an EPF? Then free insurance is for you!
Published on: 20 December 2020, 10:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now