நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 October, 2021 6:08 AM IST
Credit : Maalaimalar

மருதமலை முருகன் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருதமலை

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது‌ மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌. இந்தத் திருக்கோயிலில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இதில்‌ மருத்துவ அலுவலர்‌ மற்றும்‌ செவிலியர்‌ பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதர விபரங்களை திருக்கோயில் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பணியின் பெயர்  (Name of the job)

மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலிப் பணியிடங்கள் (Vacancy)

6

இதில் மருத்துவ அலுவலர் 2, செவிலியர் 2, பல்நோக்கு மருத்துவர் 2

கல்வித்தகுதி (Education Qualification)

மருத்துவ அலுவலர் எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டியது கட்டாயம். செலிவியர் நர்சிங் படித்திருக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவ உதவியாளர் 8-ம் வகுப்பு தேர்ச்சி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை(How to apply)

ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அனுப்பவேண்டிய முகவரி

துணை ஆணையர்‌ / செயல்‌ அலுவலர்‌

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌

மருதமலை, பேரூர்‌ வட்டம்‌

கோவை மாவட்டம்‌ – 641046.

தொலைபேசி எண்‌. 0422-2422490.

நிபந்தனைகள்‌ (conditions)

  • இந்துமதத்தைச்‌ சார்ந்தவராகவும்‌ தமிழ்நாட்டை சார்ந்தவராகவும்‌ இருக்க வேண்டும்‌.

  • தொற்றுநோய்‌ உடல்‌ அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்‌.

  • நீதிமன்றத்தில்‌ தண்டனை அடைந்தவர்கள்‌

  • பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள்‌ என நீதிமன்றத்தில்‌ தீர்மானிக்கப்பட்டவர்கள்‌

  • அரசுப்பணிகள்‌, பொது ஸ்தாபனங்கள்‌ மற்றும்‌ வேறு இடங்களில்‌ பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம்‌ செய்யப்பட்டவர்கள் ஆகியோர்‌, மேலேக் கூறியப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத்‌ தகுதியற்றவர்கள்‌.

  • நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்‌.

  • இதற்கு அரசிதழ்‌ பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச்‌ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌.

  • விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

  • நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை

  • விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

  • விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும்.

  • அசல் சான்றிதழ்களை எக்காரணம்கொண்டும் அனுப்ப கூடாது.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in/ என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள பக்கத்தில்‌ விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

இதர விபரங்களை அலுவலகத்தில்‌ அலுவலக நாட்களில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌ மற்றும்‌ திருக்கோயில்‌ இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

விண்ணப்பிக்க கடைசி தேதி (Deadline)

10-11-2021 மாலை 5.45 மணி வரை

மேலும் படிக்க...

விதை உற்பத்தியில் பிற ரக கலப்பினை தவிர்ப்பது எப்படி?

விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்- அரசு அதிரடி முடிவு!

English Summary: Job Opportunity in Marudhamalai Murugan Temple-Hindu Charitable Department!
Published on: 20 October 2021, 08:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now