மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 November, 2022 7:23 AM IST
Superb Pension Scheme

இந்தியாவில் முதியவர்களுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் எவ்வாறு சேருவது முதலீடு செய்வது குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.

ஓய்வூதியத் திட்டம் (Pension Scheme)

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணி புரிபவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு உதவும் வகையில் அரசு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது. அதே போல அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஷரம் யோகி மான்தன் என்னும் திட்டம் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து முதலீடு செய்பவர்களுக்கு 60 வயது ஆகும் போது மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள். இவர்களது மாத வருமானம் ரூ.15,000 மிகாமல் இருக்க வேண்டியது அவசியம். மேலும் இத்திட்டத்தில் சேர மற்றொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது புதிய ஓய்வு திட்டம், ஊழியர்களின், மாநில காப்பீடு கழகத் திட்டம் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகியவற்றில் இணைந்திருக்கக் கூடாது.

இத்தகைய தகுதி உடையவர்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று இத்திட்டத்தில் சேரலாம். ஒரு வேளை ஓய்வூதியம் பெறும் நபர் இறந்தால் அந்த ஓய்வூதியத்தின் 50 சதவீதம் வாழ்க்கை துணைக்கு வழங்கப்படும். ஒரு தம்பதியர் இத்திட்டத்தில் தனித்தனியாக ரூ.100 செலுத்தி வந்தால் 60 வயதுக்கு பிறகு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.72,000 ஐ ஓய்வூதிய தொகையாக பெறலாம்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம்: எச்சரிக்கை விடுக்கும் நிதி ஆயோக்!

100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் கட்டாயம்: லிங்க் வெளியிட்ட தமிழக அரசு!

English Summary: Just Pay Rs.100 a Month: Get Rs.3000 Pension!
Published on: 28 November 2022, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now