Blogs

Monday, 03 February 2020 12:27 PM , by: Anitha Jegadeesan

இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாமினை வேளாண் அறிவியல் மையம் ஏற்பாடு செய்துள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள் மற்றும் கறவை மாடு வளர்ப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

பயிற்சியின் முக்கிய அம்சமாக கறவை மாடு வளர்ப்பு,  அடர், கலப்பு மற்றும் பசுந் தீவன மேலாண்மை, கறவை இனங்களுக்கு தோன்றும் நோய் மற்றும் தடுக்கும் முறைகள், ஒட்டுண்ணி நிர்வாகம் போன்ற அனைத்து விவரங்களும் பயிற்றுவிக்க பட உள்ளன.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் வரும் 5ம் தேதி ஒரு காலை 10 மணிக்கு, நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும்,  தலைவருமான முனைவர் வே.எ.நேதாஜி தெரிவித்துள்ளார். 

இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பும் விவசாயிகள் 88839 57219, 70108 82431 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் முன்பதிவு செய்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: அக்ரி டாக்டர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)