Blogs

Thursday, 19 December 2019 05:25 PM , by: Anitha Jegadeesan

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.200 வரை உயர்ந்தது. அதை தொடர்ந்து தற்போது உருளைக்கிழங்கின் விலையும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. காலம் தவறிய பருவமழையே விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.

ஒரு மாதத்தை கடந்தும் பல முக்கிய நகரங்களில் வெங்காய விலை ரூ.140 முதல் 170 வரை விற்பனையாகிறது. இந்நிலையில் வெங்காயத்தை போன்று உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து வருகிறது. டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் உருளைக்கிழங்கின் விலை 75 சதவீதம் அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் பெய்த மழையால் உருளைக்கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், உ.பி., மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.40 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது. எனினும் ஒரு வார காலத்திற்குள் விலை குறையும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)