Blogs

Friday, 20 December 2019 04:28 PM , by: Anitha Jegadeesan

கேரளாவில் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் ஏலக்காய் சாகுபடியாகிறது.  இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது ஏலத் தோட்டங்களில் பருவ நிலை மாற்றத்தினாலும், போதுமான ஈரப்பதமின்றி விவசாயம் பாதித்தது. இதனை அடுத்து உலக சந்தையில் ஏலக்காயின் விலை உச்சத்தை தொட்டது எனலாம்.  தற்போது மீண்டும் வரத்து குறைய வாய்ப்பிருப்பதால் விலை உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது.

கேரளா  மாநிலம், தேசிய அளவில் ஏலக்காய் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றை செய்து வருகிறது. பொதுவாக சாகுபடி செய்த 40 முதல் 50 நாட்களுக்குள் காய்களை பறிப்பர். சீசனுக்கு 6 எடுப்பு வரை எடுக்கப் படும். அதில் முதல் மூன்று எடுப்புகளுக்கு மட்டுமே அதிக காய் வரத்து கிடைக்கும். தற்போது 3 வது எடுப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் சில நாட்களாக வரத்து குறையத் துவங்கி உள்ளது. இதனை அடுத்து சராசரி விலையில் கிலோவிற்கு ரூ. 300 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. தற்போது அதிகபட்ச விலையாக கிலோவிற்கு ரூ.3,500 வரை விற்கப்படுகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)