வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 December, 2019 2:26 PM IST

மக்காசோள விவசாயிகள் இனி குறைந்த கட்டணத்தில் தங்களது மக்காச்சோள கையிருப்புகளை குறைந்த கட்டணத்தில் அரசாங்க கிட்டங்கிகளில் 6 மாதம் வரை சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும் வேளையில் நல்ல விலையில் விற்பனை செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து மக்காச்சோளம் வரத் தொடங்கியுள்ளதால், விலை இறங்கு முகமாக உள்ளது. எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சேமித்து அதிக விலைக்கு விற்பனை செய்ய, அரசின் ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வைத்து மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யலாம்.

முந்தைய மாதங்களில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளத்தின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதை அடுத்து விலை குறைந்து வருகிறது. எனவே விவசாயிகள் மக்காச்சோளத்தை 6 மாதங்கள் வரை சேமிப்பு கிடங்குகளில், குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 பைசா வீதம் செலுத்தி பின் விற்பனை செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்துறையை அணுகலாம்.

English Summary: Mazie farmers can storage their stock with less rental, and avoid post harvest losses
Published on: 03 December 2019, 02:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now