மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 January, 2022 10:11 PM IST
Monthly Tarrif

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் (Electricity Bill) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் (Telescopic Tarrif) என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. இதனால், மின் உபயோகம் அதிகரிக்க அதிகரிக்க கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கும்.

அத்துடன், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் மின் உபயோகம் அதிகரிக்கும். இதனால், தமிழக அரசின் டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். உதாரணமாக, ஒரு மாதத்திற்கு 200 யூனிட்டுகள் பயன்படுத்தும் ஒருவர் இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகளை பயன்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்வோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தினால் அவர் செலுத்தும் கட்டணம் குறைவாக இருக்கும். அதுவே, இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகள் என்று வரும் போது டெலஸ்கோபிக் டாரிஃப் முறைப்படி கட்டணம் அதிகரிக்கும்.

பொருளாதார நெருக்கடி (Financial Problems)

இந்த அணுகுமுறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. மேலும், மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

உதாரணமாக ஒரு மாதத்தின் 10ஆம் தேதியில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டால், அதன்பிறகு வரும் மாதங்களிலும் அதே தேதியில் தான் மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களில் ஒரு வாரம் வரை தாமதமாகத் தான் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இதனால், தாமதிக்கப்பட்ட நாட்களுக்கான பயன்பாட்டையும் சேர்த்து அதிக தொகை வந்துவிடும்.

மாதாந்திர மின் கட்டணம் (Monthly Electricity Bill)

இந்த நிலையில், மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாதாந்திர கணக்கீடு அமல்படுத்தப்படும் போது, குறைவான கட்டணத்தை நுகர்வோர்கள் செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், நாளை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

டிஜிட்டல் மயமாகும் மின் துறை: ஸ்மார்ட் மீட்டர் திட்டம்!

அமலுக்கு வந்தது ஏடிஎம் சேவைக் கட்டண உயர்வு!

English Summary: Monthly electricity tariff to come into effect soon: Minister informed!
Published on: 04 January 2022, 09:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now