அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 August, 2021 9:10 PM IST
Credit : The Indian Express

தேசிய பென்ஷன் திட்டம் (NPS) ஓய்வு காலத்தின் போது பென்ஷன் மற்றும் மொத்தமாக ஒரு தொகை பெறுவதற்கு வழி செய்யும் திட்டமாக அமைகிறது. ஓய்வு கால திட்டமிடலுக்கு மிகவும் பொருத்தமான திட்டங்களில் ஒன்றாகவும் என்.பி.எஸ்., கருதப்படுகிறது.

அரசு ஊழியர்கள், தொழில் முறை ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இத்திட்டத்தில் இணையலாம். இதில் உள்ள சமபங்கு அம்சம் முக்கிய சாதகமாக கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில், 18 வயது முதல் 70 வயது வரை இணையலாம். என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பலன்களை காண்போம்.

அதிக வாய்ப்பு:

என்.பி.எஸ்., திட்டம் அதன் உறுப்பினர்களுக்கு, தேர்வு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகளை அளிக்கிறது. நிர்வகிக்கும் நிதியை தேர்வு செய்வதோடு, சமபங்கு அளவையும் தீர்மானிக்கலாம். மேலும், விரும்பிய நேரத்தில் முதலீடு (Invest) செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் கிடையாது.

தம்பதியர் முதலீடு:

சுயதொழில் செய்பவர்களுக்கு இத்திட்டம் ஏற்றது. சுயதொழிலில் ஈடுபட்டுள்ள தம்பதியர், தனித்தனியே கணக்கு துவங்கி முதலீடு செய்யலாம். இதன் மூலம் தனியே வரிச்சலுகை பெறலாம் என்பதோடு, ஓய்வு காலத்தில் அதிக தொகையும், அதிக பென்ஷனும் கிடைக்கும்.

ஊழியர் நலன்:

என்.பி.எஸ்., வசதியை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கலாம். இதன் மூலம் ஊழியர்களின் விசுவாசத்தை பெறலாம். இது, ஊழியர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக அமையும் என்பதோடு, நிறுவனமும் இதன் வாயிலாக வர்த்தக செலவின் கீழ் வரிச் சலுகை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

வரிச் சலுகை:

சுய வேலை செய்பவர்கள் இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு, மொத்த ஆண்டு வருமானத்தில் 20 சதவீதம் வரை வரிச் சலுகை கோரலாம். ஊதியம் பெறும் ஊழியர்கள், 80 ‘சி’ பிரிவின் கீழ் வரிச் சலுகை கோரலாம். மேலும், இன்னொரு பிரிவின் கீழ் கூடுதலாக 50 ஆயிரத்திற்கும் சலுகை பெறலாம்.

எதிர்கால பாதுகாப்பு:

எந்த ஒரு வர்த்தகமும் இடர்மிக்கது. தொழில்முனைவோர் இந்த இடரை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றாலும், என்.பி.எஸ்., திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வர்த்தக இடரை மீறி, ஓய்வு காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு: ஆகஸ்ட் 1 முதல் அமல்!

வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் புதிய திட்டம்!

English Summary: National Pension Scheme that offers major benefits!
Published on: 02 August 2021, 08:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now