மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 May, 2023 2:12 PM IST
No Tobacco Day-request to tobacco farmers from all over the world

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்களில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புகையிலை பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். ஒருவர் புகையிலை புகைக்கும் போதெல்லாம், அவரது நுரையீரலின் திறன் குறைந்து சுவாச நோய்களின் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிப்பதன் நோக்கம், தனிநபர்களும் நிறுவனங்களும் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் மற்றும் புகையிலை இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்க முடியும் என்பதே.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: தீம்

ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒரு மையக்கருவுடன் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் மைய கருப்பொருள் "எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல" (We Need Food, Not Tobacco) என்பதாகும்.

2023 உலகளாவிய பிரச்சாரம்- புகையிலையினை பயிரிடும் விவசாயிகளுக்கு மாற்று பயிர் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சத்தான மாற்று பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதையும் அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது.

உலகில் 124-க்கும் மேற்பட்ட நாடுகளில் புகையிலை வளர்க்கப்படுகிறது. ஆண்டு ஒன்றிற்கு புகையிலை உற்பத்தி மட்டும் ஏறத்தாழ சுமார் 67 லட்சம் டன்கள் ஆகும். 2008 ஆம் ஆண்டில், WHO புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை தடைசெய்தது. அவை இளைஞர்களை புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கருதியது.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் எப்படி உருவானது?

உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 7, 1988 அன்று குறைந்தது 24 மணி நேரமாவது புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க மக்களை ஊக்குவிக்கும் நோக்கில்,உலக புகைபிடித்தல் எதிர்ப்பு தினமாக அறிவிக்க அழைப்பு விடுத்தது. அதன்படி 1988 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தற்போது வரை உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே-31 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

புகைப்பிடித்தல் என்பது புகைப்பிடிப்பவர் மட்டுமின்றி, புகைப்பிடிப்பவரின் அருகில் உள்ளவரும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. விழிப்புணர்வுகள், மாற்று வழிகள் என அரசு புகையிலை ஒழிப்புக்கான முன்னெடுப்புகளை எடுத்தாலும் தன்னொழுக்கம் தலைத்தூக்கும் போது மட்டுமே புகைப்பிடித்தல் பழக்கம் நம்மை விட்டு முழுமையா நீங்கும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் காண்க:

செலவுக்கு ஏற்ற வருமானம் தரும் ஆர்க்கிட் மலர் சாகுபடி விவரங்கள்

English Summary: No Tobacco Day-request to tobacco farmers from all over the world
Published on: 31 May 2023, 02:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now