Blogs

Wednesday, 04 May 2022 08:50 PM , by: R. Balakrishnan

Officer job in Punjab National Bank: Apply now!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இது நல்ல செய்தியாக அமையும். பஞ்சாப் நேஷனல் வங்கியில், சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதை அடுத்து, அதனை நிரப்ப தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று, இந்த வங்கி அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள் - 145

பணி மேலாளர் (ரிஸ்க்) - 40
பணி மேலாளர் (கிரடிட்) - 100

தகுதிகள் - கணக்கு தணிக்கையாளர் (Chartered Accountant) அல்லது ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, நிதியியல் துறையில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 01/01/2022 தேதியின் படி, கருவூலப் பணிக்கு 25 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருத்தல் அவசியம்.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் மையங்கள் - சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் - தேர்வுக் கட்டணமாகபொதுப் பிரிவினருக்கு ரூ. 850 மற்றும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 07/05/2022

மேலும் பல தகவல்களை அறிய. www.pnbindia.in/Recruitments/aspx என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

ONGC வேலைவாய்ப்பு: 3,614 பணியிடங்களுக்கு உடனே விண்ண்ப்பியுங்கள்!

வங்கி சேமிப்புக் கணக்கை பராமரிக்கும் பாதுகாப்பான வழி முறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)