மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2021 8:29 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசிக்க உதவும், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைக்கு ரயில் சேவை, மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைகளின் ராணி (Queen of the Mountains)

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள உதகமண்டலம் எனப்படும் ஊட்டி, தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் முதன்மையானது. மலைகளின் ராணி என வருணிக்கப்படும் இந்த ஊட்டியின் காணக்கிடைக்காத இயற்கை எழிலை ரசித்தபடி பயணிப்பதற்காகவே மலை ரயில் சேரவை இயக்கப்படுகிறது.

நூற்றாண்டு பழமை (Century old)

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் சேவை தற்போது வரை இயங்கி வருகிறது.

குவியும் சுற்றுலாப் பயணிகள் (Accumulating tourists)

நீராவி இன்ஜினால் இயக்கப்படும் இம்மலை ரயிலில் பயணம் செய்வது அதிக சுகமானது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மலை முகடுகளிடையே பல்சக்கரங்களில் இயக்கப்படும் இந்த மலை ரயில் பல்வேறு குகைகளைத்தாண்டி செல்வதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

இதில் பயணம் செய்வதற்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ சார்பில் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

கொரோனாவால் நிறுத்தம் (Stop by Corona)

இருப்பினும் இந்த மலை ரயில் சேவை, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதால், ஊட்டி மலை ரயில் சேவை வரும் (செப்டம்பர்) 6 ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு அவசியம் (Booking is required)

ரயில்வேயின் இந்த அறிவிப்பு சுற்றுலாப்பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ரூ.1800 ரூபாய்க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!

கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் இந்த 5 தீமைகள்

English Summary: Ooty Mountain Train service resumes on the 6th - Get ready to travel!
Published on: 04 September 2021, 08:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now