Blogs

Tuesday, 02 March 2021 08:39 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

வளர்த்த கிடா மார்பில் முட்டும் என்பார்கள். இதற்கு உதாரணமாக தெலங்கானாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இம்மாநிலத்தில் நடைபெற்ற சேவல் சண்டையின்போது, வளர்த்த சேவலே, உரிமையாளரின் உயருக்கு எமனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள லோத்தன்னுார் கிராமத்தில், 16 பேர் அடங்கிய குழுவினர், சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தப்பிச் செல்ல முயன்ற சேவல் (Rooster trying to escape)

இதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில், கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. போட்டியின்போது, அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது.
அதை, உரிமையாளர் பிடிக்க முயற்சி மேற்கொண்டார்.

உயிரைப் பறித்தக் கத்தி (Life-threatening knife)

அப்போது எதிர்பாராதவிதமாக, சேவல் தன் கால்களால், அவரை தாக்கியது. இதன் காரணமாக காலில் கட்டப்பட்டிருந்த கத்தி, அவரின் இடுப்பை பதம் பார்த்தது. படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பலியான உரிமையாளர் (The victim is the owner)

எனினும், அதிக ரத்தம் வெளியேறியதால், சேவல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நபர்தான், அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது.

சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள, 15 பேரை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் படிக்க....

மானியத்தில் கிணறு ரெடி- மின்சாரம் எப்போ கிடைக்கும்?

மாடுகளைத் தாக்கும் கோமாரி நோய்- கட்டுப்படுத்தும் முறைகள்!

கோடைகாலத்தில் பயிரிட உகந்த பயிர்கள் எவை?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)