மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 September, 2022 7:37 AM IST

பெங்களூருவில் கடும் மழை காரணமாக வெள்ளநீர் தேங்கியுள்ளதால் விமான பயணிகள் டிராக்டர் மூலம் அழைத்து வரப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இடைவிடாது கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு கடும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ரூ.225 கோடி

கனமழை காரணமாக பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களுக்கு பெயர்போன பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் - டிராக்டர்

பெங்களூரு விமான நிலையத்திற்கு சொகுசாக விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் நகரத்துக்குள் கார்ப்பரேஷன் டிராக்டர் மூலம் அழைத்து வரப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதேபோல், பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய Work from Home அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு பகுதிகளில் நீண்டநேர மின் வெட்டு போன்ற பிரச்சினைகள் இருப்பதால் வீட்டில் இருந்தும் வேலை செய்ய முடிவதில்லை. இதுபோன்ற சூழலில் அலுவலகத்துக்கு எப்படி சென்று வருவது? இதற்காகவே ட்ராக்டர்களை வாடகைக்கு எடுத்து அதில் ஏறி ஆஃபீஸ் சென்று வருகின்றனர் ஐடி ஊழியர்கள். பல நிறுவனங்களின் CEO, CFO போன்ற சீனியர் அதிகாரிகள் கூட ட்ராக்டர்களில் போகிறார்கள்.

இந்நிலையில், பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் ட்ராக்டரில் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். சாதாரண ஊழியர்கள் மட்டுமல்லாமல் ஐடி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், நிர்வாகிகள் கூட ட்ராக்டரில்தான் ஆஃபீஸுக்கு போகின்றார்களாம்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: Passengers arriving by plane and going on a tractor!
Published on: 06 September 2022, 08:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now