நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 May, 2023 2:05 PM IST
Pension scheme

பென்சன் பெறுவோருக்கு தற்போது பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. நீங்களும் பென்சன் பெறுபவராக இருந்தால் இது உங்களுக்கு நல்ல செய்தி ஆகும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் அவ்வப்போது பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உத்தரகாண்ட் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பிறகு அவர்களுக்கு மாதத்தின் முதல் தேதியே பணம் கிடைக்கும். இது குறித்த தகவலை உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. இனி அம்மாநில மக்கள் ஓய்வூதியத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

பென்சன் (Pension)

பென்சன் பெறுவோர் இனி நீண்ட வரிசையில் நிற்கவோ அல்லது பென்சனுக்காக காத்திருக்கவோ தேவையில்லை என உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்க, மாநில அரசு சார்பில் சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7.62 லட்சம் பென்சனர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் பர்தன் கூறுகையில், ஏப்ரல் மாத பென்சன் வழங்க மே 15 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் இயக்குநர் பன்ஷிதர் திவாரி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சமூக நல பென்சன் திட்டங்களில் பணம் செலுத்த ஒவ்வொரு மாதமும் தேதி நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்து அரசு தேதியையும் நிர்ணயித்தது.

பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஆறு மாதங்களாக பென்சன் கிடைப்பதில்லை. இது போன்ற சூழ்நிலையில், அவர்கள் துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டிய சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில் இதுகுறித்த புகார் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு வந்தது. அதன் பிறகு இப்பிரச்சினை பெரிய அளவில் வெடித்துள்ளது.

மேலும் படிக்க

அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!

வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?

English Summary: Pension money will now be available immediately: State government's new initiative!
Published on: 12 May 2023, 02:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now