Blogs

Thursday, 13 April 2023 02:28 PM , by: R. Balakrishnan

PF Pension

ஊழியர்கள் தங்கள் அடிப்படை மாதச் சம்பளத்தில் 12 சதவீதம் மற்றும் இழப்பீட்டை EPF அமைப்புக்கு வழங்குவது சட்டப்படி கட்டாயமாகும். முதலாளியும் இதேபோல் பங்களிக்க வேண்டும். UAN அல்லது தனிப்பட்ட கணக்கு எண் மூலம் அடையாளம் காணப்பட்ட நிரந்தரக் கணக்கில் ஊழியர் மற்றும் முதலாளி (நிறுவனம்) இருவரும் டெபாசிட் செய்த பணம், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இருக்கும். EPF கால்குலேட்டரின் உதவியுடன் உங்கள் சேமிப்பை நீங்கள் துல்லியமாக மதிப்பிடலாம்.

EPF கால்குலேட்டர் (EPF Calculator)

உங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் உங்கள் வயதை உள்ளிட வேண்டும். முதலாளியின் பங்களிப்பு (EPS+EPF), சம்பாதித்த மொத்த வட்டி மற்றும் மொத்த முதிர்வுத் தொகை அனைத்தும் இதில் காட்டப்படும்.

ஊழியர் ஒவ்வொரு மாதமும் தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை இபிஎஃப் கணக்கில் செலுத்துகிறார். உதாரணமாக, பணியாளர் பங்களிப்பு 60,000 ரூபாயில் 12 சதவீதமாக இருக்கும் (அகவிலைப்படி இல்லை என்று வைத்துக் கொண்டால்), பணியாளர் பங்களிப்பு 7,200 ஆக இருக்கும். இந்த வகையில் நீங்கள் ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.7200 பென்சன் வாங்கலாம்.

பென்சன் (Pension)

PF பங்களிப்பு என்பது சிலருக்கு ஒவ்வொரு மாதமும் நெருக்கடியைத் தருவதாக நினைக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இதுவொரு நல்ல திட்டமாகும். மிக அவசர நேரங்களில் கூட பிஎஃப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம். வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை இதில் சேமித்து அதன் மூலம் வட்டி லாபமும் பெறுவது மிகச் சிறந்த உதவியாக இருக்கிறது.

PF கால்குலேட்டரைப் பயன்படுத்தத் தொடங்கினால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் எங்கே சேமிக்கப்படுகிறது என்றும் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்பதையும் எளிதாகப் பார்க்கலாம்.

மேலும் படிக்க

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு: முக்கிய அறிவிப்பு!

குறைந்த முதலீட்டில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)