Blogs

Tuesday, 24 December 2019 02:28 PM , by: Anitha Jegadeesan

நிகழாண்டிற்கான மணிலா மற்றும் பயறு வகை விதைகளுக்கான மானியத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க இருப்பதாக  புதுச்சேரி வேளாண் துறையின் பயிற்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், அட்டவணை இனத்தவருக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.

விவசாயிகள் தங்களின் வட்டார வேளாண் அலுவலா்களை அணுகி ஆலோசனை பெறலாம்.  மேலும் தாங்கள் உத்தேசித்துள்ள சாகுபடி பரப்பளவு மற்றும் அதற்கேற்ற விதைகளை பெறவுள்ள உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் கல்லூரிகளில் மட்டுமே வாங்க வேண்டும்.

மானியத் தொகையை வேண்டி விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான படிவத்தை அருகில் இருக்கும் உழவா் உதவியகத்தில் பெற்று பூர்த்தி செய்து அத்துடன் விதைகளை வாங்கியதற்கான ரசீதை இணைத்து வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)