Blogs

Wednesday, 26 February 2020 12:26 PM , by: Anitha Jegadeesan

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், நூற்றுக்கணக்கான குளங்களும், 289 ஏரிகளும், செய்யாறு, பாலாறு, வேகவதி என, மூன்று ஆறுகளும் பாய்கின்றன. இவையனைத்தும் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில்  இருந்து வருகின்றன. இத்தனை நீர் ஆதாரங்கள் இருந்தாலும், முறையான பராமரிப்பு,  தூர்வாரால் போன்ற நடவெடிக்கைகள் மேற்கொள்ள படாததால் பருவ மழையானது வீணாகிறது. 

ஒவ்வோர் ஆண்டும், பருவமழை சமயத்தில் பொழியும் மழை நீர் நீர்நிலைகளில் நிரம்பி வழியும் தண்ணீர், அடுத்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே, காணாமல் போகிறது. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தற்போதே நீராதாரங்களின் நிலை மோசமாகி வருகிறது. ஒரு சில நீர் நிலைகள் பாசனதிற்கு பயன்படவில்லை என்றாலும் கால்நடைகளின் தாகத்தை தனித்து வந்தன.  ஆனால், அவையும் வறண்டு வருவதால் கோடையில், கால்நடைகளுக்கும்  தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதே நிலை தான் மற்ற மாவட்டங்களிலும் தொடர்வதால் அரசு மற்றும் பொதுப்பணித்துறையினர் தேவையான நடவெடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)