Blogs

Wednesday, 19 January 2022 02:32 PM , by: R. Balakrishnan

Postal services through Post info

வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை பெறும் வகையில், 2020ம் ஆண்டு, ஊரடங்கு சமயத்தில், 'போஸ்ட் இன்போ' (Post Info) என்ற மொபைல் செயலியை, அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.

மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், அஞ்சல் நிலையத்திற்கு வராமலே, பல்வேறு சேவைகளை பெற, 'போஸ்ட் இன்போ' செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

போஸ்ட் இன்போ (Post Info)

போஸ்ட் இன்போ மொபைல் செயலியை, கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், பார்சல் என புக் செய்த அனைத்து வகை அஞ்சல்களையும், எலக்ட்ரானிக் மணி ஆர்டர் குறித்தும், கண்காணிக்க முடியும்.

சேவைகள் (Services)

அஞ்சல் நிலையங்களை கண்டறிய, தங்களது புகார்கள் குறித்து கண்காணிக்க மற்றும் போஸ்டேஜ் கால்குலேட்டர், இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் வட்டி கால்குலேட்டர் உள்ளிட்ட சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

வெளியில் வந்து அலைவதைத் தவிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட அஞ்சல் நிலையத்தின் இந்த போஸ்ட் இன்ஃபோ சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதனால், நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து அலைச்சலும் தவிர்க்கப்படும்.

மேலும் படிக்க

அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில் மகன், மகளை சேர்க்க அனுமதி!

இரயில் நிலையங்களில் மொபைல் ரீசார்ஜ் வசதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)