Blogs

Tuesday, 31 December 2019 03:00 PM , by: Anitha Jegadeesan

பாகற்காய் சாகுபடியில், கூடுதல் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதிகளில், கிணற்றுப்பாசனத்தின் மூலம் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பாகற்காயினை பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் நிலப்போர்வை தொழில் நுட்பம் பயன்படுத்தி பாகல் சாகுபடி செய்துள்ளனர். நேர்த்தியாகவும், திட்டமிட்டும் சாகுபடி செய்துள்ளதால் நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி நிலத்தை சமன்படுத்தி, மேட்டுப்பாத்திகள் அமைத்து, அதில் சொட்டுநீர் பாசனம் அமைத்து அதற்கு மேல் நிலப்போர்வை அமைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் துளைகள் இட்டு, பாகல் விதைகள் நடவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

நிலப்போர்வை முறையில், சாகுபடி செய்வதால் பாசனத்துக்கு குறைவான  நீரே தேவைப் படுகிறது. இதன் மூலம் நீர் ஆவியாகுதல் பெருமளவு தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது இம்முறையில் களைகள் வளராது. அறுபது நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். தொடர்ந்து ஐந்து மாதங்கள் வரை பலன் தருவதுடன்  நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)