Blogs

Friday, 03 January 2020 01:10 PM , by: Anitha Jegadeesan

செடி அவரையை பயிரிடுவதில் விவசாயிகள் அதிக  ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டங்கள் எதையும் சார்ந்து இல்லாமல் நிலையான வருமானம் தரும் தோட்டக்கலை பயிராக செடி அவரை இருந்து வருகிறது.  தினசரி சந்தைகள் மற்றும் வார சந்தைகளில் அவரைக்காய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நிலையான வருவாய் வருமானம் கிடைக்கும் என தெரிவித்தனர். 

மதுரை மாவட்டம்,  பேரையூர் பகுதிகளில் போதிய பருவமழை இல்லாததால் விவசாயிகள் குறைந்த நீர் பாசனத்தில் அதிக பலன் மற்றும் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடிய செடி அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய துவங்கினர்.

செடி அவரையை பொருத்தவரை விதைத்த 2வது மாதத்தில் இருந்து பலன் தொடங்கும். தொடர்ந்து 4 மாதம் வரை மகசூல் தரும். மாதத்திற்கு 200 கிலோ முதல் 250 கிலோ வரை கிடைக்கிறது. சந்தையில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.92 லட்சம் வரை வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)