மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 November, 2019 11:57 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 50% மானியத்தில் நெல் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது பரவலாக  மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலத்திற்கு தேவையான தழைச்சத்து அளிக்கும் சணப்பு மற்றும் தக்கைப் பூண்டு சாகுபடி செய்து மடக்கி உழது மண்ணை வளப்படுத்தி நெல் சாகுபடிக்கு தயார் நிலைக்கு வைக்கும்படி வேளாண் இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

சம்பா பருவத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு,  சம்பா தாளடிக்கு ஏற்ற நீண்ட கால மற்றும் மத்திய கால நெல் ரகங்களான டி.கே.எம்.-13 ரகங்களை விதைக் கிராம திட்டத்தின் மூலம் 50% மானியத்தில் பெற்று விதைக்கலாம் என்றார்.  மேலும் தேவையான விதைகள், நுண்சத்து உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். 

நடவு மூலம் நெல் சாகுபடி செய்வோர் இயந்திர நடவு செய்து, செயல் விளக்கத்திடல் அமைத்தால் ஹெக்டேருக்கு ரூ.5,000 வரை பின்னேற்பு மானியமாகப் வழங்கப் படும் என்றார். நேரடி நெல் விதைப்பில் விதைப்புக் கருவிகளை பயன்படுத்தி விதைத்து செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.1500 வரை பின்னேற்பு மானியமாக பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி தழைச்சத்து மற்றும் உரத் தேவையைக் குறைக்கலாம் என்றார்.

விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டம்,  ஓய்வூதியத் திட்டத்தில் சேராதவா்கள்,  பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் மற்றும் கிஷான் கிரிடிட் கார்டு பெறாதவர்கள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Pudukkottai dist agriculture department supplies paddy with 50% subsidy
Published on: 15 November 2019, 11:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now