மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 February, 2020 12:34 PM IST

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெறலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2019 - 20 ஆம் ஆண்டிற்கான ராபி பருவ பட்டத்துக்கு காப்பீடு செய்யாதவர்கள் இம்மாத இறுதிக்குள் காப்பீடு செய்யலாம். விருப்பமுள்ள விவசாயிகள் அருகிலிருக்கும் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி மேலும் விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. காப்பீடுக்கான பயிர்கள் மற்றும் பிரீமியம் தொகை போன்ற விவரங்கள் பின்வருமாறு. 

மக்காச்சோளம், நிலக்கடலை

பிப்ரவரி 15

ரூ.335 / ரூ.355

உளுந்து  மற்றும் துவரை

பிப்ரவரி 15

ரூ.236

சோளம் மற்றும் கம்பு

பிப்ரவரி 15

ரூ.99

எள்

பிப்ரவரி 15

ரூ.107

வெண்டை

பிப்ரவரி 15

ரூ.420

வாழை மற்றும் மரவள்ளி

பிப்ரவரி 28

ரூ.2,475 / ரூ.725

நெல்

பிப்ரவரி 29

ரூ.435

கரும்பு

அக்டோபர் 31

ரூ.1,560

 

காப்பீடு செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பெயரை பதிவு செய்து தங்களை காப்பீடு திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளலாம்.
  • பயிர் கடன் பெறாத விவசாயிகள் எனில், அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய வங்கிகளின் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது காப்பீட்டு நிறுவன முகவர்கள் மூலமாகவோ அல்லது வணிக வங்கிகள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் போது, அத்துடன் அதற்கான விண்ணப்ப படிவம், நில பட்டா, அடங்கல், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அதற்கான அதிகாரியிடம் கொடுத்து உரிய ரசீது பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Rabi crop insurance 2019- 20: Now Pudukkottai Farmers can enroll their names
Published on: 11 February 2020, 12:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now