மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 October, 2021 8:40 AM IST
Credit : Aageon Life

வருமான வரி செலுத்துபவர்கள், அதனைச் செலுத்தவேண்டியக் காலக்கெடு குறித்து அக்கறை செலுத்துவார்கள். ஆனால் வருமான வரி என்றால் என்னவென்றேத் தெரியாத ரிக்ஷா ஓட்டுனருக்கு 3 கோடி ரூபாய் வரி செலுத்த அறிவுறுத்தி, அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

நோட்டீஸ்  (Notice)

பொதுவாக வருமான வரி செலுத்துவோர் சரியான காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனில், அவர்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுவது வழக்கம்.

வருமான வரித் தாக்கலில் ஏதேனும் விவரங்கள் பொருந்தவில்லை எனில், உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். ஆனால் உத்திரபிரதேசத்தில் உள்ள ரிக்ஷா ஒட்டுனர் ஓருவருக்கு 3 கோடி ரூபாய்க்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. 

ரூ.3 கோடி நோட்டீஸ்

அமர் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் சிங். ரிக்ஷா ஒட்டுனரான இவருக்குத்தான், வருமான வரித்துறையினர் 3 கோடி ரூபாய்க்கு வருமான வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வருமான வரி நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்த பிரதாப் சிங், அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

மோசடி  (Fraud)

விசாரணையில், பிரதாப்பின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வேறு ஒருவர், மோசடி செய்து தொழில் செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. பான் அட்டைக்குப் பிரதாப் விண்ணப்பித்தபோது, இவர் படிப்பறிவில்லாதவர் என்பதைத் தெரிந்துகொண்ட தொழில்நுட்ப நிபுணர்கள் சிலர், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட பான் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரிஜினலைச் சுருட்டிக்கொண்டுள்ளனர்.

பல கோடி வியாபாரம் (Multi crore business)

பின்னர் அந்த அட்டையைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து, மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மோசடி செய்த நபர், பிரதாப்பின் பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்து, வியாபாரம் செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.
ஆக தொழில்நுட்ப அதிகாரிகள் தன்னை போலியாக ஆள்மாறாட்டம் செய்து, மோசடி செய்துள்ளதாக தனது எஃப்.ஐ.ஆரில், பிரதாப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

இலவச ரயில் டிக்கெட் வேண்டுமா?உடனே இதைச் செய்யுங்க!

பட்டாசு வடிவில் சாக்லேட்டுகள்- தீபாவளியையொட்டி விற்பனை!

English Summary: Rickshaw driver gets Rs 3 crore income tax notice
Published on: 27 October 2021, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now